உலக கோடீஸ்வரரின் பார்வையில் சிக்கிய இலங்கை!



உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இலங்கையின் மருத்துவ துறைக்கு உதவ முன்வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பிரபல அமெரிக்க வர்த்தகரும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகருமான பில் கேட்ஸ்சுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, இந்த உதவியினை வழங்க அவர் முன்வந்துள்ளதாக அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.

சுகாதாரம் தொடர்பாக அபுதாபியில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையில் சுகாதாரத்தின் மேம்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தாம் அறிந்துள்ளதாக பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சுகாதாரத்தின் மேம்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் அதற்கு உதவ தாம் தயாராகவுள்ளதாகவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.