காலி வன்முறை முஸ்லிம்களை சீண்டும் செயல்: அரச தலையீட்டை அவசரமாகக் கோரும் ஹக்கீம்




காலியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமானது முஸ்லிம்களின் பொறுமையை மீண்டும் ஒரு தடவை சீண்டிப் பார்க்கும் செயலாகும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் தொடர்பாக அரசின் உயர்மட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் தென் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தான் தொலைபேசியில் உரையாடி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான இந்தத் திட்டமிட்ட தாக்குதலின் பின்னணியை அரசு கண்டறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவும், அரசு முன்வர வேண்டும் என்று அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.