காலியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமானது முஸ்லிம்களின் பொறுமையை மீண்டும் ஒரு தடவை சீண்டிப் பார்க்கும் செயலாகும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் தொடர்பாக அரசின் உயர்மட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் தென் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தான் தொலைபேசியில் உரையாடி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான இந்தத் திட்டமிட்ட தாக்குதலின் பின்னணியை அரசு கண்டறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவும், அரசு முன்வர வேண்டும் என்று அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.