இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இலங்கை பீல்டர் ஏமாற்ற, இந்திய கேப்டன் விராட் கோலி, 5 ரன்கள் கொடுக்கும்படி கேட்டார்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு சுருண்டது.
இந்நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்த போது, இலங்கையின் கேப்டன் சண்டிமால், பந்தை பிடிக்காமலேயா பிடித்து வீசுவது போல சைகை செய்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் சண்டிமால் சுதாரித்துக்கொண்டார்.
இதைப்பார்த்த களத்தில் இருந்த அம்பயர்கள் முதல் முறை என்பதால், சண்டிமாலை வெறும் எச்சரிக்கையுடன் விட்டனர். ஆனால் இதை பெவிலியனில் இருந்து கவனித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ஐசிசி., யின் புதிய விதிமுறைப்படி இந்திய அணிக்கு 5 ரன்கள் வழங்கும்படி கையால் சைகை காட்டினார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.