மீண்டும் வெளுத்து வாங்கும் கன மழை… அச்சத்தில் சென்னை மக்கள்
சென்னையில் கடந்த ஒரு மணிநேரமாக மீண்டும் கன மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக கனமழை தொடருகிறது. நேற்று பிற்பகல் தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்தது.
இதில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையால் ஒட்டுமொத்த சென்னையின் இயல்பு வாழ்க்கையே இன்று ஸ்தம்பித்தது.
நேற்று இரவு தேங்கிய தண்ணீரே இன்று முழுமையாக வெளியேறாத நிலையில், தற்போது மீண்டும் கன மழை பெய்து வருகிறது.
இக்கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நேற்றைப் போலவே இன்றும் விடிய விடிய கனமழை கொட்டுமோ என்கிற அச்சம் சென்னைவாசிகளிடத்தில் ஏற்பட்டுள்ளதால், பெரும்பாலானோர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.