உபாதையிலிருந்து மீண்டார் அசேல! : உறுதிசெய்தது கிரிக்கெட் சபை!!!





(Asela Gunerathne return Sri Lanka Squad 2017)

இலங்கை அணியின் சகலதுறை வீரர் அசேல குணரத்ன உபாதையிலிருந்து குணமாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

அசேல குணரத்னவின் உபாதை குணமாகவில்லையென செய்தி வெளியிடப்பட்டிருந்த போதும், அஷ்லி டி சில்வா மற்றும் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் நிக் போதஸ் ஆகியோர், அசேல குணரத்ன உபாதையிலிருந்து குணமாகியுள்ளமையை உறுதிசெய்துள்ளனர்.

இதேவேளை எஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரும் உபாதையிலிருந்து நீங்கியுள்ளதாகவும் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் அசேல குணரத்ன, குசல் பெரேரா மற்றும் எஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோரை அணியில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்திய தொடருக்கான இலங்கை குழாம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.