மாத்தறையில் யுவதி ஒருவரை சந்திப்பதற்காகசென்ற இளைஞர்அதிர்ச்சி சம்பவம் ஒன்றுக்குமுகங்கொடுத்துள்ளார்.
பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய யுவதிசந்திப்பதற்காக மாத்தறை கடற்கரைக்கு சென்ற23 வயதுடைய இளைஞர் ஒருவரேபாதிக்கப்பட்டுள்ளார்.
பேஸ்புக் ஊடாக அறிமுகமாகி இருவரும் வைபர்ஊடாக தங்கள் நட்பை வளர்த்துள்ளனர்.
நாளடைவில் குறித்த இளைஞனை மாத்தறைகடற்கரைக்கு வருமாறு யுவதி அழைப்புவிடுத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்டஇளைஞன் கடற்கரைக்கு சென்றுள்ளார்.
தான் இதுவரை பார்த்திராத யுவதியை நேரில்பார்க்கும் மிகவும் ஆர்வத்துடன் கடற்கரைக்குசென்றுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலை ஊடாக மாத்தறைநகரத்திற்கு வந்த இளைஞனை முச்சக்கர வண்டிஒன்றுக்கு பின்னால் வருமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது வலுக்கட்டாயமாக குறித்துஇளைஞனை, முச்சக்கர வண்டியில் ஏற்றியகுழுவினர், அவரை தெவுன்தர துறைமுக பகுதிக்குகொண்டு சென்றுள்ளனர்.
அங்கு வைத்து ஒரு லட்சத்து 60 ஆயிரம்பெறுமதியான கையடக்க தொலைபேசியைபறித்து கொண்டு இளைஞனை வீதியில் விட்டுச்சென்றுள்ளனர்.
பேஸ்புக் காதலினால் இவ்வாறு பலர் தொடர்ந்துஏமாற்றப்படுவதாக இது தொடர்பில் அவதானமாகஇருக்குமாறு இளைஞர்களிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.