ஏ.ஆர்.எம்.ரபியூதீன்(ஊடகவியலாளர்)
அநுராதபுரம் நகரம் உட்பட அநுராதபுர மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்கள் ஹோட்டல்களில் தேநீரின் விலைகள் அதிகரித்துள்ளதாக பாவணயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேநீரின் விலை 20 ரூபா வாகவும்,பால் தேநீர் 40 ரூபாவாகவும் அதிகரிக்கப் பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.இது சம்பந்தமாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது எரிவாயு விலை அதிகரிப்பால் உணவு,பான வகைகளின் விலை அதிகரிக்கப் பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தற்கிணங்கவே 15 ரூபாவாக காணப்பட்ட ஒரு கோப்பை தேநீரின் விலை 20 ரூபாவாகவும்,ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 40 ரூபாவாகவும் அதிகரிக்கப் பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த பாவனையாளர் ஒருவர் விலை சற்று அதிகரித்தால் உடனே விலைகள் கூடும் .ஆனால் விலைகளில் சற்று குறைவு ஏற்பட்டால் பொருட்களின் விலைகள் ஒரு நாளும் குறையாது.இது தான் உண்மையான நிலை என தெரிவித்தார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.