வ.ம.மாகாண பட்டதாரி /டிப்ளோமாதாரிஆசிரியர்களுக்கான வதிவிட பயிற்சி செயலமர்வு அநுராதபுரத்தில்.




அண்மையில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிகள் /டிப்ளோமா தாரி ஆசிரியர்களுக்கான 05 நாட்கள் கொண்ட திசை முகப்படுத்தல் பயிற்சி செயலமர்வு ஒன்றை நடாத்த வ.ம.மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.இது சம்பந்தமான கடிதம் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .


வதிவிட பயிற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச் செயலமர்வு எதிர்வரும் 2017.11.04 பி .ப 1.00 மணி தொடக்கம் 2017.11.09 பி .ப.3.00 மணி வரையில் அநுராதபுரம் கல்வி அபிவிருத்தி மத்திய நிலையத்தில் இடம் பெறவுள்ளதாகவும் ,காலை உடற் பயிற்சிக்குத் தேவையான உடைகளுடன்,பயிற்சிச் செயலமர்வுக்குப் பொருத்தமான ஆடைகளுடனும் சகல ஆசிரியர்களும் கட்டாயம் சமூக மளிக்குமாறும் வேண்டப் பட்டுள்ளனர் .


கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு தங்குமிட வசதி,உணவு,பானம் என்பனவற்றுடன் கடமை லீவும் வழங்கப் படவுள்ளதாக 2017.10.23 ஆம் திகதி இடப்பட்ட உமெப/அ.தெ/சங்/01/10/2017 ஆம் இலக்கமிடப்பட்ட கடிதத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர் .


ஏ.ஆர்.எம்.ரபியுதீன் - அநுராதபுரம் நிருபர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.