பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் மூன்றாவது பதிப்பில் கராச்சி கிங்ஸ் அணியிலிருந்து சங்ககாரா மற்றும் கிறிஸ் கெயில் விடுவிக்கப்பட்டுள்ளனர்
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாம் பதிப்பு அடுத்தாண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது.
இதில் மொத்தம் ஆறு அணிகள் கலந்து கொள்ளவுள்ளன. அதில் முக்கிய அணியான கராச்சி கிங்ஸிலிருந்து குமார் சங்ககாரா, கிறிஸ் கெயில், பொல்லார்டு, சோயிப் மாலிப் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதை கராச்சி கிங்ஸ் அணியின் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கடந்த வருடம் கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராக சங்ககாரா செயல்பட்ட நிலையில் அவரால் அணியை இறுதி போட்டிக்கு அழைத்து செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதியை கராச்சி கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
அவர் அந்த அணியை வழிநடத்துவார் எனவும் எதிர்ப்பார்க்கபடுகிறது.
அதே நேரத்தில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதியை கராச்சி கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
அவர் அந்த அணியை வழிநடத்துவார் எனவும் எதிர்ப்பார்க்கபடுகிறது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.