தற்கொலை செய்த புதுப்பெண்: காதல் மனைவியின் உடலை கூட பார்க்காத கணவர்



புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கதிர்வேல்- அருணாதேவி தம்பதியின் மகள் கங்கா (19). இவருக்கும் அவரின் உறவினர் பாலுவுக்கும் (21) காதல் இருந்து வந்த நிலையில் கடந்த யூன் மாதம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தனது மனைவி கங்காவை, பாலு அவர் தாய் வீட்டில் விட்டு சென்றார். இந்நிலையில், நேற்று முன் தினம் கங்கா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் விசாரித்து வந்த நிலையில், கங்காவின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசோதனை நடந்த மருத்துவமனை வாசலில் குவிந்த கங்காவின் உறவினர்கள், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில், கங்கா இறந்தது குறித்து பாலுவுக்கு தகவல் கொடுத்தும் அவர் கங்காவின் உடலை பார்க்கவரவில்லை. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் உறுதியளித்ததையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.