போட்டியை முடிப்பதில் 1000 பாண்டியாவுக்கு சமம் தல தோனி
இந்திய அணியின் தல என செல்லமாக அழைக்கப்படும் தோனி, இளம் வீரர் பாண்டியாவை விட 1000 மடங்கு உயர்ந்தவர் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டராக திகழ்ந்துவரும் ஹர்திக் பாண்டியா அண்மையில் நடைப்பெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி அனைவரின் பாரட்டையும் பெற்று வருகின்றார்.
அவர் விளையாடிய சில போட்டிகளிலேயே கபில் தேவ், தோனி போன்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிடும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இந்திய அணியின் பெஸ்ட் ஃபிணிஷர் என போற்றப்படும் தல தோனியைப் போல, ஹர்திக் பாண்டியா முன்னேறி வருகிறார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
1000 பாண்டியாவுக்கு சமம்:
பாண்டியாவை தோனியுடன் ஒப்பிடுவது குறித்து கர்சன் காவ்ரி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தயவு செய்து தோனியுடன் பாண்டியாவை ஒப்பிட வேண்டாம். பாண்டியா வளர்ந்து வரும் வீரர். அவரின் திறமை அபாரம்.
சிறப்பாக வளர்ந்து வரும் பாண்டியாவை வாழ்த்தலாமே தவிர, இப்படி ஒப்பிட்டு பேசி அவரின் திறமைக்கு தடையாக அந்த வார்த்தைகள் அமைந்து விடக் கூடாது.
தோனி ஏற்கனவே 3 உலகக் கோப்பைகளை வென்றும், பேட்டிங், கீப்பிங் என பல சாதனைகளைப் படைத்து நிரூபித்து காட்டியவர். அவரின் மேட்ச் ஃபிணிஷிங்கை யாருடனும் ஒப்பிட முடியாது.
தோனி தற்போதும் தன் முழு திறமையை நிரூபித்து 1000 பாண்டியாவுக்கு சமமாக உள்ளார்.” என தெரிவித்துள்ளார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.