2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெற்று பெரும் அசிங்கத்தில் இருந்து தப்பித்துள்ளது.
அண்மையில் இலங்கைக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 போட்டி என அனைத்திலும் வென்று அசத்தியது.
இந்த போட்டித் தொடரில், ஒருநாள் போட்டியில் 2 போட்டிகளிலாவது இலங்கை வெல்ல வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், தரவரிசையில் பின்னடைவு அடைந்து இலங்கை அணி உலகக் கோப்பை போட்டிக்கு நேரடி தகுதி பெற முடியாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
அப்படி இல்லையெனில், இலங்கைக்கு அடுத்து உள்ள விண்டீஸ் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைப்பெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட தொடரை முழுவதுமாக வெல்ல வேண்டும்.
அப்படி வெல்லும் பட்சத்தில் ஒருநாள் தொடர் தரவரிசையில் 8வது இடத்தை பிடிக்கும். விண்டீஸ் அணிக்கு நேரடி வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று நடந்த விண்டீஸ் அணி எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இலங்கை அணி உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.