நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.
இதற்கு, வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே நேரடித்தகுதி பெறுவதற்கான வாய்ப்பை பெறும். மீதமுள்ள இரண்டு அணிகள் தகுதிச்சுற்று மூலம் பிரதான சுற்றில் பங்கேற்கும்.
அதன்படி, 119 புள்ளிகளுடன் தென்னாப்ரிக்க அணி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
118 புள்ளிகளுடன் 2 முறை உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
5 முறை உலகச்சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 116 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது.
113 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் நேரடி தகுதி பெற்றுள்ளது.
111 புள்ளிகளுடன் தென்னாப்ரிக்கா 5வது இடத்திலும், 95 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 6வது இடத்திலும் உள்ளது.
94 புள்ளிகளுடன் வங்கதேச அணி 7வது இடத்திலும், 86 புள்ளிகளுடன் இலங்கை 8வது இடத்திலும் உள்ளது.
தற்போது, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் இங்கிலாந்து உடன் முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததால், இரண்டு முறை உலகச்சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, உலகக்கோப்பை தொடருக்கு நேரடித் தகுதி பெறும் வாய்ப்பை நழுவ விட்டது.
தகுதிச்சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஜிம்பாப்வே, உள்ளிட்ட 10 அணிகள் விளையாட உள்ளன. இதிலிருந்து 2 அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.