கடந்த வாரம் இலங்கையில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று கவனம் செலுத்தியுள்ளது.
அதிவேகமாக வந்த கார் ஒன்று பயணிகள் நிறைந்த பஸ் ஒன்றை கணப்பொழுதில் புரட்டித் தள்ளிய அதிர்ச்சி காணொளி ஒன்றை குறித்த ஊடகம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2ம் திகதி மஹரகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 பல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பில் வெளியாகியுள்ள சீ.சீ.டீ.வி காணொளிக்கமைய, வேகமாக காரை ஓட்டி வந்த சாரதிக்கு அதனை நிறுத்திக் கொள்ள ஒரு நொடியேனும் நேரம் காணப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
அந்த நிலையில் கார், பயணிகள் பஸ் மீது மோதியதினால் பஸ் பல அடி தூரத்திற்கு பறந்து சென்று புரண்டுள்ளதாக ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விபத்தின் பின்னர் அருகில் இருந்த சீ.சீ.டீ.வி கமராவில் விபத்தின் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இதேவேளை, விபத்திற்கு காரணமாக இருந்த காரின் முன் பக்கம் முழுமையாக தேசமடைந்துள்ளது.
மொத்தமாக 65 பேர் அந்த பஸ்ஸில் பயணித்துள்ள நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைத்து கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து தொடர்பில் கார் மற்றும் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.