ரோஹிங்யா முஸ்லிம்கள் மீளவும் திரும்பி வர முடியாத வகையில் பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் கண்ணிவெடிகளை மியன்மார் இராணுவம் புதைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பங்களாதேஷ் அரசாங்கம் மியன்மார் அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மியன்மாரில் இராணுவத்தினருக்கும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இடையிலான மோதல் கடந்த இரண்டு வாரங்களாக உச்சமடைந்துள்ளது.
இதில் 400க்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறி பங்களாதேஷில் குடியேறியுள்ளனர்.
இந்நிலையில், தமது நாட்டிற்கு வரும் ரோஹிங்யா முஸ்லிம்களை மீளவும் மியன்மாருக்கு திருப்பியனுப்புவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எனினும், ரோஹிங்யா முஸ்லிம்கள் மீளவும் நாட்டிற்கு வருவதை தடுக்கும் வகையில் பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் அந்நாட்டு இராணுவம் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.