ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக கண்ணிவெடிகள் புதைப்புமியன்மார் இராணுவத்தின் மிலேச்சத்தனம்!





ரோஹிங்யா முஸ்லிம்கள் மீளவும் திரும்பி வர முடியாத வகையில் பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் கண்ணிவெடிகளை மியன்மார் இராணுவம் புதைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பங்களாதேஷ் அரசாங்கம் மியன்மார் அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மியன்மாரில் இராணுவத்தினருக்கும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இடையிலான மோதல் கடந்த இரண்டு வாரங்களாக உச்சமடைந்துள்ளது.

இதில் 400க்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறி பங்களாதேஷில் குடியேறியுள்ளனர்.

இந்நிலையில், தமது நாட்டிற்கு வரும் ரோஹிங்யா முஸ்லிம்களை மீளவும் மியன்மாருக்கு திருப்பியனுப்புவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எனினும், ரோஹிங்யா முஸ்லிம்கள் மீளவும் நாட்டிற்கு வருவதை தடுக்கும் வகையில் பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் அந்நாட்டு இராணுவம் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.