Hassim Mohemed Naleem
-
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டியின் போது நாணய சுழற்சியில் இலங்கை அணியே வெற்றிப் பெற்றதாகவும், அதை இந்திய அணிக்கு வழங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் வர்ணனையாளர் முரளி கார்த்திக்கால் இந்த நாணய சுழற்சி மேற்கொள்ளப்பட்ட போது, உபுல் தரங்க நாணத்தை சுழற்றிய வேளையில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி தலையென (HEAD) என கோரினார்.
பின்னர், போட்டி தீர்மானிப்பாளரான எண்டி பைக்ரொப்ட் பூ (TAIL) என அறிவித்து உபுல் தரங்கவை நோக்கி கையை காட்டினார். எனினும், மீண்டும் அவர் எதையோ கூற முயற்சித்த போதும், வர்ணனையாளரான முரளி கார்த்திக் தலை (IT'S HEAD) என அறிவித்து கோலி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் முதலில் களத்தடுப்பினை தெரிவுசெய்தார். எனினும்,இலங்கை அணித்தலைவர் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றிருந்தால் முதலில் களத்தடுப்பினை தெரிவுச்செய்யவே இருந்ததாக வர்ணணையாளரிடம் தெரிவித்திருந்தார்.
குறித்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. இருபதுக்கு20 போட்டிகளின் போது நாணய சுழற்சியின் வெற்றியானது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்க அதேவேளை இந்த குளறுபடி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வீடியோவுடன் செய்தியி பகிர்ந்து வருகின்றதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
madawalanews

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.