கார் டயர் வெடித்து விபத்து… உயிர் தப்பினார் சுரேஷ் ரெய்னா !!




கார் டயர் திடீரென வெடித்த விபத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய போதிலும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் நீண்ட நாட்களாக தவித்து வருகிறார்.

இந்நிலையில் நாளை துவங்க உள்ள துலிப் டிராபியில் சுரேஷ் ரெய்னா பங்கேற்று விளையாட உள்ளார்.

இதற்காக காசியாபாத்தில் இருந்து கான்பூருக்கு சுரேஷ் ரெய்னா தனது சொகுசு காரில் சென்று கொண்டிருந்தபோது நேற்று நள்ளிரவு 2 மணியளவில் காரின் டயர் திடீரென வெடித்துள்ளது. இந்த விபத்தில் இருந்து ரெய்னா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மாற்று டயர் இல்லாமல் நள்ளிரவில் நடுரோட்டில் காத்திருந்த சுரேஷ் ரெய்னா அப்பகுதி காவல்த்துறையினர் உதவி மூலம் கான்பூர் வந்தடைந்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.