ஊரையே ஏமாற்றிய பெண் போலீஸ்…!

ஊரையே ஏமாற்றிய பெண் போலீஸ் Fake Lady Police. டிராபிக் கான்ஸ்டபிளிடம் மாட்டி அசிங்கப்பட்டார்?

உத்தரபிரதேசம் பைசாபாத்தை சேர்ந்தவர் சந்தியா திவாரி. பட்டதாரியான இவருக்கு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே லட்சியம். இதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் பைசாபாத் நகரில் போலீஸ் உடையில் ஸ்கூட்டியில் செல்லும்போது, சிக்னலை தாண்டி சென்றார்.


இதனை பார்த்த டிராபிக் போலீஸ் ஒருவர் விரட்டி சென்று மடக்கி பிடித்தார். அவரிடம் கேட்டபோது தான் ஒரு போலீஸ் அதிகாரி என்னையே மடக்கி பிடிக்கிறாயா என மிரட்டினார்.

இதனால் சந்தேகம் அடைந்த அந்த கான்ஸ்டபிள் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டார்.

ஆனால் அவர் காட்ட மறுத்து விட்டார். இதனால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது போலி பெண் போலீஸ் அதிகாரி என்பது தெரிய வந்தது.

மேலும் இவர் லக்னோவில் போலீஸ் வேலை கிடைத்துள்ளது என கூறி பைசாபாத்தில் வீடு பார்த்து குடியேறி உள்ளது தெரியவந்தது.

அதுமட்டும் அல்லாமல் போலீஸ் அதிகாரி போர்வையில் வியபாரிகளிடம் பணம் வசூல் செய்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.