காவத்தை, கொடகும்புரவில் உயர்தர மாணவி வெட்டி கொலை

காவத்தை, எந்தானை, கொடகும்புர பிரதேசத்தில் க.பொ.த. உயர்தரத்தில் பரீட்சைக்கு தோற்றி வரும் மாணவி ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெல்மதுளை தர்மாலோக்க மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தில் (கலைபிரிவு) கல்வி கற்று இம்முறை நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிவரும் எந்தானை கொடகும்புர பிரதேசத்தை சேர்ந்த கே.டபிள்யு.தீபிகா பியதர்ஷனி (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் குறித்த மேலும் தெரியவருவதாவது,

கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை நேற்றுமுன்தினம்(24) காலை வேலைக்கு சென்று விட்டு பகல் 2.00 மணியளவில் தமது வீட்டுக்கு வந்தபோது மகள் கழுத்து வெட்டப்பட்ட நிலையில வீட்டில் சடலமாக கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பலியான யுவதியின் தாய் இறந்து ஒரு வருடமும் ஒரு மாதமும் ஆகியுள்ள நிலையில் இச்சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெல்மதுளை பதில் நீதவான் சரத் பிட்டகம்பல தலைமையில் மரண பரிசோதனைகள் நேற்று இடம்பெற்றது. மேலதிக பரிசோதனைக்காக சடலம் இரத்தினபுரி பொது வைத்தியாசாலையின் மரண பரிசோதனை பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து 26 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை இறக்குவானை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினகரன் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.