நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியுள்ளார் ஸிம்பாவேயின் முதற் பெண்மணி


தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸிம்பாவே ஜனாதிபதியின் பாரியாரும் முதற்பெண்மணியுமான கிரேஸ் முகாபே, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியுள்ளார்.

ஹோட்டலொன்றில் 20 வயதான மொடல் அழகியொருவரை இவர் தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிஸில் சரணடைந்த இவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். இவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நேற்று (சனிக்கிழமை) அழைப்பு விடுக்கப்பட்டது.

இருந்த போதிலும், தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துகொள்ளும் முகமாக இவர் அங்கு சென்றதால், நேற்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பியுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் ஆபிரிக்காவுக்கு இவர் சென்றுள்ள வேளையில், தப்பிச் செல்லாத வகையில் எல்லையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.