உத்தரபிரதேசத்தில் அதி விரைவு ரயில் விபத்துக்கு ரயில்வே ஊழியர்களே காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்துக்கு மனித தவறே காரணம் என்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சுரேஷ் பிரபு குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மாலை முசாபர்நகர் பகுதியில் அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 23 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருந்தனர்.
குறித்த விபத்து தொடர்பில் நடைபெற்ற ஆரம்ப கட்ட விசாரணையின் போது, ரயில் தண்டவாளத்தில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் இது குறித்து ரயில் ஓட்டுனருக்கு தெரிவிக்கப்படாததே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.