கள்ளகாதலனுக்காக கணவனை கொன்று புதைத்த பாசக்கார மனைவி.!



கள்ளகாதலனுக்காக கணவனை கொன்று புதைத்த பாசக்கார மனைவி.! ஓசூரில் பயங்கரம்.

ஓசூரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்தவர் ஜஸ்டின். இவர் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.


கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் விடுமுறையில் ஓசூருக்கு வந்துள்ளார். அதன்பிறகு ஜஸ்டின் 20ம் தேதி முதல் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் அவரது வீட்டில் ரத்த கரைகள் படிந்திருந்ததை அருகில் இருப்பவர்கள் பார்த்து இது பற்றி போலீசில் புகார் தெரிவித்தனர்.

புகாரின் பேரில் ஜஸ்டின் மனைவி இந்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது கள்ளக்காதலன் லிண்டோ உதவியுடன் கொலை செய்து மத்திகிரி அருகில் உள்ள சுடுகாட்டில் புதைத்ததாக கூறினார்.

இதனை தொடர்ந்து சுடுகாட்டிற்கு மருத்துவர்களுடன் சென்ற போலீசார் உடலை தோண்டி அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.