இந்திய கிரிகெட் அணியில் தற்போது அதிகமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கபட்டு வருகிறது.
இதனால் பல அனுபவ வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
தற்பொழுது இலங்கைக்கு எதிராக விளையாடி வரும் அணியில் சுரேஷ் ரெய்னா,யுவராஜ்,அஸ்வின் போன்ற அனுபவீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அடுத்து வரவிருக்கும் 2019 உலககோப்பையில் தோனி விளையாடுவாரா இல்லையா என ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தோனி பங்குபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி கோலி கூறியதாவது ,
தோனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிட்டாலும் சர்வதேச போட்டிகளில் தொடர்சியாக விளையாட வாய்ப்பு இருப்பதாக கோலி கூறியுள்ளார்.
இந்த வாய்ப்பினை அவர் சரியாக பயன்படுத்தி விளையாடினால் 2019 உலக கோப்பை போட்டியில் அவர் இடம் பெறுவார் என்று நம்புவதாக தெரிவித்தார்.
2019 உலக கோப்பையை கருத்தில் கொண்டு யுவராஜ் சிங் அணியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார்.
தேர்வின் அடுத்த குறியாக தோனி உள்ளார்.
தோனி சிறப்பாக விளையாடவிட்டால் அவரை நீக்கி அவருகு பதில் தினேஷ் கார்த்திக் அல்லது நிஷப்பந்தை தேர்வு செய்யும் முடிவில் தேர்வு குழுவினர் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.