பாக்கிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்றைய தினம் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 482 ஓட்டங்களைப் பெற்றனர்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இன்றும் களத்தில் இருந்த டிமுத் கருணார்த்தன 196 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். மேலும் இலங்கை அணி சார்பில் 12வது வீரராக கருணாரத்ன தனது 3௦௦௦ ஓட்டங்களை இன்று பூர்த்தி செய்தார்.
சந்திமால் 62 ஓட்டங்களுடனும், டிக்வெல 52 ஓட்டங்களுடனும், டில்ருவான் பெரேரா 58 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணியின் ஓட்ட எண்ணிகையை உயர்த்த உதவி செய்தனர்.
பந்துவீச்சில் யசிர் ஷா ஆறு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியினர் இன் இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்றனர்.
தற்பொழுது களத்தில் மசூட் மற்றும் அஸ்லாம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக உள்ளனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.