வாய்விட்டு சிரிக்கும்போதே திடீரென அப்படியே தூங்கிவிடும் விசித்திர நோயால் இளம் பெண் ஒருவர் பாதிக்கபட்டுள்ளார்.
பிரித்தனியாவின் nottingham நகரை சேர்ந்தவர் jessica southall .இவருக்கு ஒரு வயது குழந்தை உள்ளது .
jessica,narcolepsy,மற்றும் cataplexy எனப்படும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது எதையாவது நினைத்து அவர் சிரித்தால் அடுத்த நொடியே அவர் தூங்கிவிடுவார்.
தூங்கும் சமயத்தில் அவரது மூளை செயல்பாட்டில் தான் இருக்கும். அருகில் நடக்கும் விசயங்களை அவரால் உணர முடியும்.
ஆனால் எழுந்திருக்க முடியாது. தசைகள் பலமாக இல்லாததால் உடல் சோர்வடைந்து அவருக்கு இப்படி தூக்கம் வந்துவிடுகிறது.
இவருக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை அளித்தும் jessica-வுக்கு இந்த நோய் பிரச்சனை தீரவில்லை.
இது குறித்து jessica கூறுகையில் பதினாறு வயதில் இந்த பிரச்சனை ஏற்பட்டது.
உறவினருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் கூறிய ஜோக்கை கேட்டு சிரித்து அப்படியே தூங்கிவிட்டதாக கூறினார்.
தற்போது இது பழகிவிட்டதால் தூக்கம் வரப்போவதை முன்னரே அறிந்து கொண்டு படுக்கை அல்லது தரை பகுதிக்கு சென்று விடுவேன் என jessica கூறியுள்ளார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.