இலங்கை அணியின் தேர்வாளர்களான சனத் ஜயசூரிய மற்றும் ஏனைய குழுவினர் இந்திய அணியுடன் இம்மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள T20 போட்டியில் விளையாடும் 15 பேர் அடங்கிய இலங்கை குழாமின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
இக்குழாமில் T20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமைமிக்க வீரர்களான சீக்குகே பிரசன்ன, தசுன் சானக்க மற்றும் இசுரு உதான ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் காயத்தில் இருந்து மீண்டு தேசிய கடமையைப் பொறுப்பேற்றிருக்கும் பிரசன்ன இறுதியாக ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்காக விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய அணியுடனான T20 தொடரில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் விக்கும் சஞ்சய இக்குழாமில் இணைக்கப்பட்டுள்ளார், அத்தோடு காயம் காரணமாக இந்திய அணியுடன் இதுவரை நடைபெற்று முடிந்திருக்கும் போட்டிகளில் விளையாடாமல் போயிருந்த சுரங்க லக்மாலும் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
மேலும், அணியின் சுழல் பந்துவீச்சு துறையை வலுப்படுத்த வலதுகை சுழல் வீரரான ஜெப்ரி வன்டர்சேயிற்கும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.