யு.எஸ். மத்திய அவசர மேலாண்மை ஏஜன்சியிடமிருந்து கனடா அதிகார பூர்வமான வேண்டுகோள் ஒன்றை பெற்றுள்ளது. அதிகரித்து வரும் ஹார்வி சூறாவளியின் பின்விளைவுகளை சமாளிக்க தேவையான குழந்தைகளிற்கான சுகாதார பொதிகள் தலையணைகள் துவாலைகள் மற்றும் துணிகள் போன்றனவற்றை வழங்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ யு.எஸ்.அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவி வழங்க முன்வந்ததை தொடர்ந்து இவ்வாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இது குறித்து அதிபர் டிரம்ப் பிரதம மந்திரி ட்ரூடோவிற்கும் கனடிய மக்களிற்கும் அவர்களது உதவி மற்றும் இரு நாடுகளிற்கும் இடையிலான நெருங்கிய பிணைப்பையும் குறித்து நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வேண்டுதல் பணியாளர்களோ அல்லது வன்பொருட்களோ அல்ல, ஆக அவசர தேவை பொருட்கள் மட்டுமே-முக்கியமாக சிறுவர்களிற்கான குழந்தைகளின் போத்தல்கள், குழந்தை உணவுகள், தொட்டில்கள் மற்றும் ரவல்கள் என்பனவாகும்.
இப்பொருட்கள் கனடா பொது சுகாதார அவசர குவியல்களில் இருந்தே வழங்கப்படுவதாகவும் ஆனால் மற்றய மாகாண அதிகாரிகள் கனடிய செஞ்சிலுவை சங்கம் போன்றனவும் தேவையான உதவி வழங்க முன்வந்துள்ளதாக அறியப்படுகின்றது.
உதவிகள் அனைத்து மிக விரைவாக இடம்பெறுகின்றன. கஷ்டம் ஏற்படும் போது அயலவர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் உதவுதல் அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
canadamirror
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.