கட்டிடம் இடிந்து விழுந்து தாய், தந்தை பலி..! அனாதையான ஒன்றரை வயது குழந்தை…!!


திருச்சி மலைக்கோட்டையில் தஞ்சை குளத்தெருவில் 3 மாடி கட்டிடம் அதிகாலை 3.45 மணியளவில் திடீரென மளமளவென்று பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டிடம் முழுவதும் தரைமட்டமானது.


சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பதறியடித்துக் கொண்டு எழுந்து வீதிக்கு ஓடிவந்தனர்.

வீடு தரை மட்டமாகி கிடப்பதை பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையம் மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வாகனங்களில் விரைந்து தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

3 பொக்லின் எந்திரங்கள் மூலம் இடிபாடுகள் சிறிது, சிறிதாக அகற்றப்பட்டன.

மொத்தமாக ஒரே நேர்கோட்டில் கட்டிடம் தரைமட்டமானதால் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பெண் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பரமேஸ்வரி என்ற 1 1/2 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

இந்த விபத்தில் பலியானவர்களில் 2 பேர் இந்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை என்று கூறப்படுகிறது. தாய் தந்தை பலியானதால் ஒன்றரை வயது குழந்தை பரமேஸ்வரி அனாதையாக தவிக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.