தான் சுயநலம் இல்லாதவன் என்பதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று மீண்டும் நிரூபித்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இலங்கையுடன் மூன்று டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்க வீரர்களான ரோஹித் சர்மா 9 ரன்னிலும், ராகுல் 24 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் கோஹ்லி மற்றும் மணிஷ் பாண்டே கூட்டணி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது, வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில், கேப்டன் கோஹ்லி 82 ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட்டை இழந்தார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.