மியான்மரில் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் ரோகிங்கிய முஸ்லீம்கள், அங்கிருந்து வங்காளதேசத்திற்கு படகு மூலம் அகதிகளாக செல்கின்றனர். இவ்வாறு வங்காளதேசத்திற்கு சென்ற அகதிகளின் சில படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் ஐந்து குழந்தைகள் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நப் நதியில் படகு கவிழ்ந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 25 முதல் மியான்மரின் ராக்கின் மாகாணத்தில் உள்ள ரோகிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்ததில் இருந்து எல்லையில் உள்ள நப் நதியை கடக்க முற்பட்ட பலர் பலியாகி வருவது தொடர்கதையாகி வருகிறது.
மிகவும் ஆக்ரோஷமான கடல் நீர் உள்ள பகுதியான நப் நதியின் முகவாயில் சிறிய மீன் பிடி படகு மூலம் மக்கள் செல்ல முற்படுவதால் இது ஆபத்தான பயணமாக அமைந்துள்ளது.
நப் நதி, வங்காளதேசத்தையும் மியானரில் உள்ள ராக்கைன் மாகாணத்தையும் பிரிக்கும் வகையில் அமைதுள்ளது. தற்போது வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் வங்காளதேசத்துக்கு சென்றுள்ளதாக வங்கதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.