ரோஹிஞ்சாக்களின் இந்த அவல நிலையானது பல்வேறு நாடுகளில் கவனத்தையும், பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுக்க செய்துள்ளது. இந்நிலையை கையாளத் தவறியதாக மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சு சி, விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இனவெறிக்கெதிராக போராடிய தென் ஆப்பிரிக்காவின் டெஸ்மோண்ட் டூடு கடந்த வியாழக்கிழமை இதுகுறித்து கூறும்போது, "மியான்மரின் மிக உயர்ந்த பதவியை அடைவதற்கு நீங்கள் கொடுக்கும் அரசியல் விலை உங்களது மெளனம்தான் என்றால், அந்த விலை கண்டிப்பாக உச்சபட்சமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடி பல்வேறு ஆண்டுகள் வீட்டு சிறையில் இருந்தவரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான ஆங் சான் சூ சியை "மக்களின் நீதிக்காகவும், மனித உரிமைகள் மற்றும் உங்கள் மக்களின் ஒற்றுமைக்காகவும் குரல் கொடுங்கள்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
jaffnamuslim

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.