சுவரைத் துளைத்து நெளிந்து நுளைந்து ஓடித்தப்பிய கைதி; அதிர்ந்துபோன பொலிஸார்!



ஸ்ரீலங்காவின் களுத்துறைப் பகுதியில் கைதி ஒருவர் பொலிஸ் நிலையத்தின் சுவரைத் துளைத்துத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


நேற்றிரவு நடந்த இந்தச் சம்பவத்தால் களுத்துறை புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

போதைப்பொருள் விற்பனை தொடர்பாக நபர் ஒருவர், மாத்துகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் புளத்சிங்கள பொலிஸ் நிலைய தடுப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு தடுப்பறையின் கழிப்பறைக்குள் சென்று அதன் ஒருபக்கச் சுவரை மிகவும் நூதனமான முறையில் துளையிட்டுள்ளார். பின்னர் அந்தத் துளையினூடாக வெளியேறி பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், குறித்த சந்தேகநபரைக் காண்பதற்காக அவரது உறவினர்கள் நேற்றிரவு பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அதன்போது குறித்த நபரை தடுப்பறையில் தேடிய பொலிஸார் அங்கு அவர் இல்லாமை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கழிப்பறைப்பக்கம் சென்று பார்த்தபோதே அவர் துளையிட்டுத் தப்பிச் சென்ற விடயம் தெரியவந்தது.

சந்தேக நபரைத் தீவிரமாகத் தேடிவந்த பொலிஸார் இன்று முற்பகல் மீண்டும் அவரைக் கைது செய்துள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.