முன்னாள் கேப்டன்கள் அமைத்துக்கொடுத்த அணியை தான் நான் வழிநடத்துவதாக இந்திய கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையே நேற்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில் தற்போதைய இந்திய அணி குறித்து பேசியுள்ள விராத் கோஹ்லி, முன்னாள் கேப்டன் தோனி அமைத்துக்கொடுத்த பாதையில் தான் தான் இலகுவாக பயணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் “என்னைப்பொறுத்தவரையில் ஏற்கனவே தோனி தலைமையில் விளையாடிய வீரர்கள் தான் தற்போதைய அணியில் உள்ளனர்”. சிறந்த இந்திய கேப்டன் என்ற பெருமைக்கு இன்னும் நான் நீண்ட தூரம் செல்ல வேண்டும். தோனிக்கு மேல் கங்குலி உள்ளார் என்று தன்னடக்கமாக தெரிவித்துள்ளார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.