இந்தியா: யோகி தலைமையிலான உத்திர பிரதேச பாஜக அரசு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்குகளில் சிக்க வைத்து என்கவுண்டர் முறையில் கொல்லப்படுவதாக சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான ஹர்ஷ் மந்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் உத்திர பிரதேசம் ஷாம்லி நகரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களில் இருவர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். போலீஸ் தரப்பில் சொல்லப்படுவது என்னவெனில், போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பியோடியதை அடுத்தே அவர்கள் கொல்லப்பட்டனர் என்கின்றனர். ஆனால் அது திட்டமிட்ட படுகொலை என்று ஹர்ஷ் மந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊடகங்கள் வேண்டுமென்றே யோகி அரசின் நடவடிக்கைகளுக்கு துணை போகின்றன. என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த முசஃபர் நகர் கலவர வழக்கை முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்ப முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் ஹர்ஷ் மந்தர் தெரிவித்தார்.
சுமார் 30 முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் யோகி அரசில் பொய்யான வழக்குகள் மூலக் கைது செய்யப்பட்டு என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலையும் ஹர்ஷ் மந்தர் வெளியிட்டுள்ளார்.
யோகி அரசு குறிப்பிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.