மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து சாய்ந்தமருதில் கண்டன பேரணியும் மகஜர் சமர்ப்பிப்பும்



எம்.வை.அமீர், யூ.கே.காலிதீன்-

அகிம்சையை போதனையாகக்கொண்ட மதத்தை பெருவாரியாக பின்பற்றும் மியன்மார் மக்களால், அங்குவாழும் சிறுபான்மை ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த முஸ்லிகள் மீது நடத்தப்படும் அத்துமீறிய காட்டுமிராண்டித்தனமான கொடூரமான கொலைகள், கற்பழிப்புகள் மற்றும் துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்தக்கோரியும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகளை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் மியன்மார் அரசுக்கும் அதன் தலைவி சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகிக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்கக் கோரியும் 2017-09-15 ஆம் திகதி ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து மாபெரும் கண்டன பேரணியும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனிபாவிடம் மகஜர் சமர்ப்பிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச அமைப்புக்கள் பூரண ஆதரவு வழங்கியிருந்தன.

பேரணியின் போது கொலைகளை நிறுத்து, ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு சுயாட்சியை பெற்றுக்கொடு, ஆங் சாங் சூகியின் சமாதானத்திற்கான நோபல் பரிசை பறிமுதல்செய், ஐ.நா வே மியன்மார் மக்களை கண்திறந்து பார் என்ற கோஷங்களும் எளுப்பப்பட்டதுடன் பாததைகளும் ஏந்தி நின்றனர். இறுதியில் மியன்மார் மக்களுக்கு ஈடேற்றம் கோரி துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.