இலங்கை அணியின் தொடர் தோல்வியால் வர்ணையாளர் அறையில் தான் கடினமான நாட்களை கழிப்பதாக சர்வதேச கிரிக்கெட் வர்ணையாளரும் , இலங்கை அணியின் முன்னாள் வீரருமான ரசல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் இலங்கை அடைந்த தொடர் தோல்வி குறித்து பேசிய ஆர்னல்ட், இலங்கை அணி பெறும் தொடர் தோல்விகள் காரணமாக கிரிக்கெட் வர்ணனையாளர் அறையில் இத்தினங்களில் தான் மிகவும் கடினமான நாட்களை எதிர்கொள்கிறேன்.
நாம் எப்போதும் முயற்சிப்பது நல்ல விடயங்களை ஏற்படுத்த , குறைப்பாடுகளை ஏற்படுத்த அல்ல. நாட்டை போன்று வீரர்களையும் ஊக்கவிக்கவே முயற்சி செய்கிறோம். அனால் வீரர்களிடமிருந்து உரிய விடயம் வராவிட்டால் அது மிகவும் கடினமாகிவிடும்.
இலங்கை கிரிக்கட் அணி தமது திறமைக்கு ஏற்ப விளையாட வில்லை. இலங்கை வீரர்கள் அணிக்காக இதை விட சிறந்த பங்களிப்பை தர முடியும் என்பது எனது மட்டுமன்றி சர்வதேச கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
அணியை மீட்டு முன்னோக்கி கொண்டு செல்லும் பொறுப்பு மற்றையவர்களை விடவும் அணி வீரர்களுக்கே உள்ளது எனவும் ரசல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.