ரோஹிங்யா முஸ்லீம்கள் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன??



மியான்மர் நாட்டில் இருந்து வெளியேறும் ரோஹிங்யா முஸ்லீம்கள் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று இந்திய சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.


மியான்மர் நாட்டில் உள்ள ராகினே மாகாணத்தில் பெளத்தர்களுடன், பங்களதேஷை பூர்விகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் பெருவாரியாக வாழ்கின்றனர். 


கிட்டத்தட்ட 11 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கு வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் நீண்டகாலமாக பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகின்றனர். அவர்கள் மீது மியான்மர் பாதுகாப்பு படைகளும், சில பெளத்த மத குழுக்களும் கூட தாக்குதல் நடத்துகின்றனர்.


ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக ரோஹிங்யா போராளிகள் ‘தி அராக்கன் ரோஹிங்யா சால்வேசன் ஆர்மி’ என்ற பெயரில் ஒரு போராளி குழு இயங்கி வருவதாகவும், இந்த போராளிகள் குழுவினர் கலவரங்களை தூண்டுவதாகவும், கிராம தலைவர்கள், அரசு உளவாளிகள் ஆகியோரை கொல்வதாகவும், தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு இடையூறுகள் செய்வதாகவும் மியன்மார் அரசு குற்றம் சாட்டுகிறது.


இந்நிலையில், ரோஹிங்யா முஸ்லீம்கள் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அகதிகளாக எல்லைப் பகுதியில் வெளியேறி வருகின்றனர். அதிக அளவில் பங்களாதேஷுக்கு செல்கின்றனர்.


இந்நிலையில், சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கும் ரோஹிங்யா முஸ்லீம்களை மீண்டும் மியான்மர் திருப்பி அனுப்பும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. 


இது சர்வதேச மனித உரிமை மாநாடுகளின் பரிந்துரைகள் மீறும் வகையில் உள்ளது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு ரோஹிங்யா முஸ்லீம்கள் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளது.


இந்த வழக்கின் விசாரணை வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு ஆதரவாக ஆஜரான பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அகதிகளை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

madawalanews
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.