தையல் தொழில் செய்யும் மலிங்காவின் தாய்..மலிங்கா பற்றிய உண்மையை வெளியிட்டார்

இலங்கை நட்சத்திர பந்து வீச்சாளர் லிசித் மலிங்கா பற்றிய உண்மையை அவரின் தாய் வெளிப்படுத்தியுள்ளார்.

34 வயதனா இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா, 2004ம் ஆண்டு தனது முதல் போட்டியில்களமிறங்கினார். 

இதுவரை இலங்கை அணிக்காக 202 ஒரு நாள் போட்டியில் விளையாடிவுள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு Tanya Pereraவை மணந்த மலிங்கா தனது மகன், மகளுடன் கொழும்பில் வசித்து வருகிறார்.


கிரிக்கெட் மற்றும் குடும்ப வாழ்க்கை என பிஸியாக இருக்கும் மலிங்கா, 10 வருடங்களுக்கும் மேலாக காலியில் உள்ள தனது குடும்ப வீட்டிற்கு விஜயம் செய்யவில்லை என மலிங்காவின் தாய் ஸ்வர்ண கூறியுள்ளார்.


மலிங்காவின் பெற்றோர் காலி அருகே உள்ள சிறிய கிராமத்தில் உள்ள குடும்ப வீட்டில் வசித்து வருகின்றனர். வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்ற மலிங்காவின் தாய் ஸ்வர்ண தற்போது தையல் தொழில் செய்து வருகிறார்.


சமீபத்தில் ஸ்வர்ண அளித்த பேட்டியில், மலிங்கா தனது சிறிய கிராமத்து வாழ்க்கையை விட அதிகமாக நகர வாழ்க்கையை விரும்புவதால், 10 வருடங்களுக்கும் மேலாக குடும்ப வீட்டிற்கு விஜயம் செய்யவில்லை என குறை கூறியுள்ளார்.


2014 வரையில், மலிங்காவின் நிகர சொத்து மதிப்பு 8 மில்லியன் டாலர் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.