இலங்கை அணிக்கு நல்ல திறமை இருக்கிறது, ஆனால் நம்பிக்கை குறைவாக இருப்பதே தற்போதைய பிரச்சனையாக உள்ளது என மேத்யூஸ் கூறியுள்ளார்.
இலங்கை அணி தலைவர் பதவியிலிருந்து மேத்யூஸ் கடந்த யூலை மாதம் விலகினார். அந்த அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அது குறித்து மேத்யூஸ் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், எல்லோரையும் விட இலங்கை அணி வீரர்கள் தொடர் தோல்வியால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதே அணியை வைத்து கொண்டு இரு மாதங்களுக்கு முன்னர் நடந்த சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் 322 ஓட்டங்கள் என்ற இலக்கை தொட்டு வெற்றி பெற்றோம்.
எங்களிடம் திறமை இல்லாமல் இல்லை. ஆனால் அணியினரிடம் நம்பிக்கை குறைவாக இருப்பதே தற்போதைய பிரச்சனையாக உள்ளது.
சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடிய ஆறு வீரர்கள் காயம் காரணமாக இந்தியாவுடனான தொடரில் விளையாடவில்லை.
இது எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தோற்றதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
இலங்கை தொடர் தோல்வியடைந்து வரும் நிலையில், ஒரே ஒரு வெற்றி தற்போது எங்களுக்கு தேவைப்படுகிறது.
அது மட்டும் கிடைத்தால் நிச்சயம் அணிக்கு பெரிய தன்னம்பிக்கை கிடைக்கும் என மேத்யூஸ் கூறியுள்ளார்.
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.