இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் உபுல் தரங்கா, இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இலங்கையுடன் ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இலங்கை அணியின் கேப்டன் உபுல் தரங்கா இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தரங்கா விதிகளை மீறியதன் காரணமாக கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.