எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற தீ விபத்து தொடர்பில் இருவர் கைது.

நிட்டம்புவ - கலகெடிஹேன எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஏற்பட்ட தீ பரவலை தொடர்ந்து அங்கு தீப் பற்றி எரிந்த பவுஸரின் சாரதி மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கம்பஹா காவற்துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் கவனக்குறைவுடன் செயற்பட்ட காரணத்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற் கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கொழும்பு - கண்டி வீதியின் நிட்டம்புவ கலகெடிஹேன எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

எவ்வாறாயினும் , சுமார் 2 மணி நேர போராட்டத்தின் பின்னர் தீப்பரவல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது.

தீயினால் , உயிர்ச் சேதங்கள் எதுவும் பதிவாகாத நிலையில் , எரிபொருள் நிரப்பு நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

எனினும் சேத விபரங்கள் குறித்து இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.