நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்க இருக்கும் சட்டம் மலைய மக்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால் அதற்கான எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு கூட்டம் நுவரெலியா கல்வி இராஜாங்க அமைச்சரின் காரியாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
தொடர்ந்து இந்த தீர்மானம் தொடர்பில் அங்கு கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர், “புதிய முறையிலான உள்ளூராட்சி தேர்தல் திருத்தத்தின் ஊடாக சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக மலையக மக்களுக்கு வட்டாரத் தேர்தல் முறைமை பாதிக்காமல் இருக்க வேண்டும்.
இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வைப் பெற வேண்டுமானால் சிறுபான்மை கட்சிகளான மலைய கட்சிகள்¸ முஸ்லிம் கட்சிகள் உட்பட ஏனைய சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.
இதற்கு மலைய மக்கள் முன்னணி¸ தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பன ஆயத்தமாக உள்ளன. நாங்கள் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக இருந்தாலும் எம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உரிய இடத்தில் எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.
இதனையே எமது கட்சியான மலையக மக்கள் முன்னணி தனது மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானித்தது” என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.