இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் உபுல் தரங்கவுக்கு இரு போட்டிகளில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ICC) இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (24) இடம்பெற்ற இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி குறித்த நேரத்திற்கு பந்து வீசி முடிக்காது, அதிக நேரம் எடுத்துக் கொண்டமை காரணமாகவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அணியின் தலைவர் எனும் ரீதியில் உபுல் தரங்கவுக்கு, இப்போட்டித் தடை விதிக்கப்பட்டதுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் இரு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு அவர் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சுற்றுலா இந்தியா அணியுடனான தொடரின், எதிர்வரும் ஞாயிறு (27) இடம்பெறவுள்ள மூன்றாவது போட்டி (பல்லேகல), மற்றும் வியாழன் (31) இடம்பெறவுள்ள நான்காவது போட்டிகளில் (ஆர். பிரேமதாச) அவரால் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தொடரின் ஐந்தாவது ஒரு நாள் போட்டி (ஆர். பிரேமதாச) எதிர்வரும் செப்டெம்பர் 03 ஆம் திகதியும், ஒரே ஒரு போட்டியாக இடம்பெறவுள்ள ரி20 போட்டி செப்டெம்பர் 06 ஆம் திகதியும் (ஆர். பிரேமதாச) இடம்பெறவுள்ளன.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று (24) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்றதோடு, ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.