இரத்தினபுரி – இறக்குவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எந்தானை, கொடகும்புர பகுதியில் 19 வயது மாணவி ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும், பட்டேயாய ஸ்ரீ கொடகும்புர பகுதியைச் சேர்ந்த தீபிகா பிரியதர்ஷனி என்ற மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரை பெல்மதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.