வாங்கிய அடியை மறக்காத நியூசி.., முதலில் பந்துவீசுகிறது இந்தியா
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் 3 டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரில் கடந்த 1ம் தேதி டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முதல் போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டதால், அவருக்கு பதிலாக கஷ்மீரை சேர்ந்த முகமது ஸிராஜ், இன்றைய போட்டி மூலம் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
அணி விபரம்;

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.