இன்று பயிற்சி ஆட்டம்: இலங்கை வீரரை புகழ்ந்த சஞ்சு சாம்சன்



இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வருகிற 16ம் திகதி தொடங்கவுள்ள நிலையில் இன்று இரு அணிகளும் மோதும் பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது.

இலங்கை அணியை, சஞ்சு சாம்சன் தலைமையிலான 3-ம் நிலை வீரர்களை உள்ளடக்கிய வாரியத் தலைவர் அணி எதிர்கொள்கிறது.

கொல்கத்தாவில் இன்று தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் முனைப்புடன் செயல்பட இலங்கை வீரர்கள் தயாராக உள்ளனர்.

சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய மண்ணில் இலங்கை டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.

ஏற்கனவே ஐக்கிய அரபு எமீரகத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் 2-0 என்ற கணக்கில் வென்றதால் அதே உத்வேகத்துடன் செயல்படவுள்ளது.

இருப்பினும் ஆல் ரவுண்டர் ஏஞ்சலா மேத்யூஸ், மூத்த வீரர் ரங்கன ஹேரத் தவிர மற்ற வீரர்கள் இந்திய மண்ணின் முதன்முறையாக டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளனர்.

இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில், ரங்கன ஹேரத் அனுபவம் வாய்ந்த வீரர், அவர்களுக்கு இது பயிற்சி ஆட்டமாக இருந்தாலும் மிகச்சிறந்த வீரரை எதிர்கொள்ள சிறப்பான வாய்ப்பாக எங்களுக்கு அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.