சவூதி அரேபியாவின் முன்னாள் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் நயிப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் முடிக்குரிய இளவரசர் நிலையிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர் அந்நாட்டில் ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ் இலக்குவைக்கப்பட்ட பிந்திய அரச குடும்ப அங்கத்தவராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நடவடிக்கையின் பிரகாரம் இளவரசர் மொஹமட் பின் நயிப்பினதும் அவரது நேரடி உறவினர்களதும் வங்கிக் கணக்குகள் சவூதி அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இந்த ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் கீழ் அந்நாட்டைச் சேர்ந்த 11 இளவரசர்களும் 4 அமைச்சர்களும் பல முன்னாள் அமைச்சர்களும் கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையானது அந்நாட்டு தற்போதைய முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், தனக்கு சவாலாக இருப்பவர்களை அகற்றி தான் அதிகாரத்துக்கு வருவதை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொண்ட ஒரு செயற்பாடாக நோக்கப்படுகிறது.
இந்நிலையில் சவூதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்ட பெருந்தொகையான கைதுகள் மனித உரிமைகள் தொடர்பான கவலையை அதிகரிப்பதாகவுள்ளதாக அமெ ரிக்காவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணி ப்பகம் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.