கொச்சியில் இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் கோலாகலமாக நேற்று தொடங்கியது.
கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் அட்லெடிகோ டி கொல்கத்தா ஆடிய முதல் போட்டி டிராவில் முடிந்தது.
ஐ.எஸ்.எல்யின் நான்காவது சீசனான இந்த தொடரில், சென்னையின் எப்.சி, டெல்லி டைனமோஸ், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ் உள்ளிட்ட பத்து அணிகள் பங்கேற்றுள்ளன.
கொச்சியில் உள்ள நேரு மைதானத்தில் நடந்த தொடக்க விழாவில், இந்தி நடிகர் சல்மான்கான், மம்முட்டி, சச்சின் டெண்டுல்கர், கத்ரீனா கைஃப் ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், சல்மான்கானும், கத்ரீனா கைஃப்பும் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
அதன் பின்னர், மம்முட்டி கால்பந்தினை போட்டி ஒருங்கிணைப்பாளர் நிதா அம்பானியிடம் வழங்க போட்டி தொடங்கியது.
இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இரு அணி கோல் கீப்பர்களும் சிறப்பாக செயல்பட்டதால் கோல் ஏதும் விழவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
ஐ.எஸ்.எல் தொடரின் முதல் போட்டி எந்த அணிக்கும் வெற்றி இல்லாமல் டிராவில் முடிவது இதுவே முதல் முறையாகும்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.