கோலாகலமாக தொடங்கிய ஐ.எஸ்.எல்யின் நான்காவது சீசன்: டிராவில் முடிந்த முதல் ஆட்டம்


கொச்சியில் இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் கோலாகலமாக நேற்று தொடங்கியது.

கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் அட்லெடிகோ டி கொல்கத்தா ஆடிய முதல் போட்டி டிராவில் முடிந்தது.

ஐ.எஸ்.எல்யின் நான்காவது சீசனான இந்த தொடரில், சென்னையின் எப்.சி, டெல்லி டைனமோஸ், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ் உள்ளிட்ட பத்து அணிகள் பங்கேற்றுள்ளன.

கொச்சியில் உள்ள நேரு மைதானத்தில் நடந்த தொடக்க விழாவில், இந்தி நடிகர் சல்மான்கான், மம்முட்டி, சச்சின் டெண்டுல்கர், கத்ரீனா கைஃப் ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், சல்மான்கானும், கத்ரீனா கைஃப்பும் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.


அதன் பின்னர், மம்முட்டி கால்பந்தினை போட்டி ஒருங்கிணைப்பாளர் நிதா அம்பானியிடம் வழங்க போட்டி தொடங்கியது.



இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இரு அணி கோல் கீப்பர்களும் சிறப்பாக செயல்பட்டதால் கோல் ஏதும் விழவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

ஐ.எஸ்.எல் தொடரின் முதல் போட்டி எந்த அணிக்கும் வெற்றி இல்லாமல் டிராவில் முடிவது இதுவே முதல் முறையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.