எரிபொருளை விநியோகம் இன்று பிற்பகலுக்குள் முழுமையாக வழமைக்கு..?



எரிபொருளை விநியோகிக்கும் பணிகளை இன்று பிற்பகலுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவர முடியும் என கனிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

15 ஆயிரம் மெற்றிக் தொன்னுக்கும் அதிகளவான எரிபொருள் தற்போதையளவில் நாடுமுழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், கொழும்பு மாவட்டத்தின் பெரும்பாலான எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைத்துள்ளதாகவும், வெளி மாவட்டங்களின் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என்றும் எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பெற்றோல் பிரச்சினை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழுவின் அறிக்கை அடுத்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட உள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கை கையளிக்கப்பட உள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.