ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் 40ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்துவெற்றி பெற்றது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.இந்திய அணியில் முகம்மது சிராஜ் புதுமுகமாககளமிறங்கினார். கப்தில் மற்றும் முன்ரோ தொடக்கஆட்டக்காரர்களாக பேட்டிங் செய்தனர்.
இருவரது அதிரடியை கட்டுபடுத்த முடியாமல் இந்திய பவுலர்கள்திணறினர். 11 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை கடந்தது. 12வது ஓவரை வீசிய சாகல் கப்திலை வெளியேற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய வில்லியம்சன் 12 ரன்களில்புதுமுக பவுலர் சிராஜ் பந்தில் ரோகித் வசம் கேட்ச் கொடுத்தார்.ஆனாலும் முன்ரோ சிக்சர்கள், பவுண்டரிகளுடன் 54 பந்துகளில்தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். 20 ஓவர்கள்முடிவில் நியூசிலாந்து அணி 196 ரன்கள் குவித்தது. முன்ரோ 109ரன்களுடனும், ப்ரூஸ் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.இந்திய தரப்பில் சாகல், சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளைவீழ்த்தினர்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாகரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இறங்கினர். ஆனால்நியூசிலாந்து பவுலர்கள் 2-வது ஓவரிலேயே இருவரையும்வெளியேற்றி அதிர்ச்சி அளித்தனர். ரோகித் 5 ரன்னுடனும்,தவான் ஒரு ரன்னுடனும் வெளியேறினர். 11 ரன்களுக்கு 2விக்கெட் இழந்தது.
அதன்பின் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயரும், விராட் கோலியும்ஓரளவு தாக்குப் பிடித்தனர். இந்த ஜோடி 53 ரன்கள் சேர்த்தது.ஷ்ரேயஸ் ஐயர் 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரைதொடர்ந்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா ஒரு ரன்னில்வெளியேறினார்.
விராட் கோலி மட்டும் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 61 ரன்கள்எடுத்து ஆட்டமிழந்தார். தோனியுடன் இணைந்து 56 ரன்கள்சேர்த்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய அக்சர் படேல் 5 ரன்களில்ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் தோனி 37 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 49ரன்களில் அவுட்டானார். இதையடுத்து 40 ரன்கள்வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 20 ஓவர் முடிவில்இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.புவனேஷ்வர் குமார் 2 ரன்னுடனும், பும்ரா ஒரு ரன்னுடனும்களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் போல்ட் அற்புதமாகபந்து வீசி 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.
இதன்மூலம் நியூசிலாந்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. மூன்றாவது போட்டி திருவனந்தபுரத்தில் வரும் 7-ம்தேதி நடைபெறுகிறது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.